சென்னை ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு; போராட்டத்தில் மே 17 இயக்கத்தினர்| Hindi Letters Removed at Chennai Railway Stations; May 17 Movement Protests

ஒன்றிய வேலைகளில் இந்தி-ஆங்கிலத்தில் தேர்வு நடத்துவதால் இந்தி பேசாத மாநில இளைஞர்கள் தங்கள் சொந்த தாய்மொழியில் தேர்வு எழுத இயலாமல் போகிறது.

இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமது தாய்மொழியில் எழுதி வெற்றி பெறுகிறார்கள். இதனால் ரயில்வே, வங்கிகள், வரி அலுவலகங்கள், என்.எல்.சி போன்ற நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைகள் கிடைப்பதில்லை.

தமிழ்நாட்டில் இந்திய ஒன்றிய அரசின் நிறுவனங்களில் இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் பணியாற்றுகின்றனர். இந்நிலைக்கு காரணம் இந்தி மொழி திணிக்கப்படுவதுதான். ஆகவே இந்தி மொழி அழிப்பு போராட்டத்தை மே17 இயக்கம் அறிவித்து முன்னகர்த்துகிறது. தொடர் இந்தி அழிப்பை நடத்துகிறது.

 திருமுருகன் காந்தி

திருமுருகன் காந்தி

இதன் தொடர்ச்சியாக 1938ம் ஆண்டு மொழிபோர் ஈகியர் தாளமுத்து நினைவு நாளான மார்ச் 11ம் தேதியன்று சென்னை பூங்கா ரயில்நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்துப் போராட்டத்தை தொடங்கியது.

போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்று சென்னை ரயில்வேயின் குரோம்பேட்டை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையங்களில் உள்ள இந்தி பெயர் எழுத்துகள் மே17 இயக்கத் தோழர்களால் அழிக்கப்பட்டன” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link