துாத்துக்குடி:மேற்காசிய போர்ச் சூழலை அடுத்து, வாடிக்கையாளர்களின் கன்டெய்னர்களை வைக்க கூடுதலாக 90,000 சதுர மீட்டர் இடத்தை ஒதுக்கியிருப்பதாக துாத்துக்குடி வ .உ.சி., துறைமுகம் அறிவித்து உள்ளது.
இது குறித்து துறைமுகத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறியதாவது:
மேற்காசியாவில் நிலவும் போர்ச்சூழலை கருத்தில் கொண்டு, எங்கள் வாடிக்கையாளர்களின் கன்டெய்னர்களை பாதுகாப்பாக வைத்திருக்க கூடுதலாக 90,000 சதுர மீட்டர் இடத்தை ஒதுக்கியிருக்கிறோம். கால அவகாசத்தை தாண்டியும் அவர்கள் கன்டெய்னர்களை வைத்து கொள்ளலாம்.
தற்போதைய நிலையில் அவை செல்லும் பாதை மாறக்கூடும் என்பதால் இந்த வசதியை அளிக்கிறோம். இதுவரை துறைமுக இயக்கமும் வர்த்தகமும் பாதிக்கப்படவில்லை என்பதால் அந்த வசதி இன்னும் பயன்படுத்தப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
