கடற்கரையில் அமர்ந்து பார்த்தால் விதவிதமான அலைகள் வரும். சில அலைகள் சுகமாக இருக்கும், சில நம்மை இழுத்துச் செல்ல முயலும். அரசியல் சூழலிலும் இன்று பல புதிய அலைகள் வீசுகின்றன. ஆனால், அந்த அலைகளையெல்லாம் தாங்கி நிற்கின்ற ஒரு பெரும் பாறையாக நான் தற்போதைய முதலமைச்சரைப் பார்க்கிறேன். விமர்சனங்கள் காந்தி முதல் கடவுள் வரை அனைவருக்கும் உண்டு; ஆனால் ஒரு தீர்வைத் தேடும்போது நிதர்சனம் எது என்பதை நாம் உணர வேண்டும்.
நமது வாழ்க்கையை நாமே தீர்மானிக்க வேண்டிய தருணம் இது. உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்தால், தமிழகத்தின் விடியல் ‘உதயத்தில்’ தான் இருக்கிறது என்பது புரியும். சமூகத்திற்காக 100 வயது வரை வாழ்ந்த ஐயா நல்லகண்ணு போன்றவர்களின் வாழ்வு கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. கலைவாணர் காட்டிய வழியில் நகைச்சுவையோடு நற்பண்புகளையும், கருத்துக்களையும் விதைக்கும் கலைஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.
நம்பிக்கையோடு கூடிய இந்த முகங்களைப் பார்க்கும்போது, தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகால எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் இருப்பதை நான் நிதர்சனமாக உணர்கிறேன்.” எனக் குறிப்பிட்டார்.
