புதுடில்லி: மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவை, ‘துரோகி நண்பர்’ என காங்கிரஸ் எம்பி ராகுல், விமர்சித்தார். அதற்கு பதிலடியாக ராகுலை ‘ நாட்டின் எதிரி ‘ என மத்திய அமைச்சர் கூறிய வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகி உள்ளது.
லோக்சபாவில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து பார்லிமென்ட் வளாகத்தில் ஈடுபட்டு இருந்தனர். அதில், ராகுல் பங்கேற்றார். அப்போது, அந்த வழியாக மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு பார்லிமென்ட் சென்றார்.
இவர் கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்னர், காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்தவர் ஆவார்.
அவர் சென்றதை பார்த்த ராகுல், ‘ இதோ ஒரு துரோகி போய் கொண்டிருக்கிறார். முகத்தை பாருங்கள் என்றார். மேலும் அருகில் வந்த மத்திய அமைச்சரிடம், ” ஹலோ சகோதரரே. எனது துரோகி நண்பர்.கவலைப்பட வேண்டும்.நீங்கள் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பி வருவீர்கள்,” எனக்கூறி கைகுலுக்குவதற்காக ராகுல் தனது கையை நீட்டினார்.ஆனால், கை கொடுக்க மறுத்த ரவ்னீத் சிங், ” ராகுலை நாட்டின் எதிரி” என பதிலடி கொடுத்துவிட்டு சென்றார்.
இது தொடர்பாக ரவ்னித் சிங் கூறியதாவது: அவர் கை குலுக்க முயன்ற போது, ‘ ஒவ்வொரு நாளும் ராணுவத்தையும், நாட்டையும் பற்றி அவதூறாக பேசும் நீங்கள் தேச துரோகிகள் மற்றும் நாட்டின் எதிரிகள். ஒரு சர்தார், சீக்கியர்களின் கொலையாளியான இந்திரா குடும்ப வாரிசுடன் ஒரு போதும் கைகுலுக்க மாட்டார்,’ என்றுநான் பதிலளித்தேன் என்றார்.அதேநேரத்தில் ராகுலின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சி வக்காலத்து வாங்கி உள்ளது.
