கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு யூனிட்டுக்கு ₹2 மின்சார சலுகை|Gas Cylinder Shortage: Tamil Nadu Announces Power Relief

இந்தியா முழுவதுமே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.

இதனால், வணிக சிலிண்டர்கள் விநியோகத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, டீக்கடைகள், உணவகங்கள் மின்சார அடுப்பிற்கு மெல்ல மெல்ல மாறி உள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் கேஸ் சிலிண்டர் பிரச்னையை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 10 நாள்களுக்கு தமிழ்நாட்டில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விறகு அடுப்பு

விறகு அடுப்பு

மேலும், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியுள்ளதாவது, “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் மின்சார கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை வழங்கப்பட உள்ளது.

வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு நீங்கும் வரை மின்சார பயன்பாட்டிற்கான இந்தச் சலுகை தொடரும்.

டீக்கடைகள், வீட்டில் உணவு தயாரித்து விற்பவர்களுக்கும் இது பொருந்தும்.

இந்தச் சூழலில் விறகு எரிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னனுமதி தேவையில்லை” என்று கூறியுள்ளார்.

Source link