நமது நிருபர்பெண்கள் மீதான குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ்

நமது நிருபர்

பெண்கள் மீதான குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து கிரீஷ் ஷோடங்கர் கூறியதாவது: துாத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது பள்ளி மாணவி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தினருடன் பேசினேன், அவர்களுடன் காங்கிரஸ் துணை நிற்கும் என்றும், சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்றும் உறுதி அளித்தேன்.

மாணவியை கொன்ற, குற்றவாளிகள் விரைவாக கைது செய்யப்பட்டு, நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. இவ்வாறு கிரீஷ் ஷோடங்கர் கூறினார்.

Source link