சின்னம்மாவை பசும்பொன் வந்தப்ப ரெண்டு தடவை ஏற்கனவே பாத்துப் பேசியிருக்கேன், அம்மாவுக்குப் பிறகு திமுகவை எதிர்க்க அவங்கதான் சரியான ஆள்னு எனக்குத் தோணுச்சு. பன்னீர், பழனிசாமி ரெண்டு பேருமே முதலமைச்சராக காரணம் அவங்கதானே/ இவங்க ரெண்டு பேர் மட்டுமில்ல அதிமுகவுல முக்கால்வாசி பேர் வெள்ளையும் சொள்ளையுமா திரியறதுக்கு காரணமே அவங்கதான்.
அவங்க வந்து புதுக்கட்சி தொடர்பா பேசினாங்க. மறுப்பு எதுவும் சொல்ல முடியலை. அதனால சம்மதிச்சிட்டேன். வர்ற தேர்தல்ல கட்சி போட்டியிடும். கூட்டணி தொடர்பான மத்த விஷயங்களை அவங்க பார்த்துப்பாங்க. இறுதியானதும் அவங்களே சொல்வாங்க’’ என்றவரிடம். கட்சியில் உங்களுக்கு என்ன பொறுப்பு என்றோம்.
“நிறுவன தலைவர் நானே தான். அவங்க செயலாளரா இருந்து கட்சியை நடத்துவாங்க’’ என்கிறார்.
