ஈரான் மீது திணிக்கப்பட்டுள்ள நியா யமற்ற போர் முடிவுக்கு வர வேண்டும் ; அங்கு, அமைதி நிலவ வேண்டும். அந்நாட்டுக்கு

ஈரான் மீது திணிக்கப்பட்டுள்ள நியா யமற்ற போர் முடிவுக்கு வர வேண்டும் ; அங்கு, அமைதி நிலவ வேண்டும். அந்நாட்டுக்கு யார் தலைமை வகிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அமெரிக்காவிற்கோ அல்லது இஸ்ரேலுக்கோ இல்லை. அதை, தீர்மானிக்கும் உரிமை ஈரான் மக்களுக்கே உண்டு.

ஒமர் அப்துல்லா ஜம்மு – காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி

குதிரை பேரத்தில் பா.ஜ.,!

ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., சார்பில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், மொத்தம் உள்ள நான்கு இடங்களையும் கைப்பற்ற அக்கட்சி முயற்சிக்கிறது. இதற்காக, குதிரை பேரத்தில் ஈடுபடும் முயற்சியில் களமிறங்கி உள்ளது. ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தலில், இவ்வாறு வெல்வது குற்றம்.

நவீன் பட்நாயக் ஒடிஷா முன்னாள் முதல்வர், பிஜு ஜனதா தளம்

மரியாதை அளித்தது இல்லை!

மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், அம்பேத்கருக்கு உரிய மரியாதை வழங்கியதில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்சி ராமின் பிறந்த நாளுக்கு மட்டும் எவ்வாறு அக்கட்சி மரியாதை செலுத்த முன் வருகிறது. அரசியல் ஆதாயத்திற்காக, பல்வேறு தந்திரங்களை அவர்கள் கையாண்டு வருகின்றனர்

. மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி

Source link