DMK victory assured, nothing will happen no matter what Modi does says vaiko-திமுக வெற்றி உறுதி மோடி என்ன செய்தாலும் ஒன்றும் நடக்காது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணியில் த.வெ.க இணைந்தால் தி.மு.கவுக்கு பாதிப்பா என்று கேட்கிறீர்கள். அத்தைக்கு மீசை முளைத்த பிறகுதான் சித்தப்பா என்று சொல்ல முடியும். யூகங்கள், விருப்பங்கள் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது? புதிதாக உருவாக்கப்பட்ட த.வெ.க., பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிக்கு செல்லுமா என்று தெரியாது.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

ஆனால், ஒரு வாரத்திற்குள் நிலைமை தெரியும். யார் யாரோடு கூட்டணி வைக்கிறார் என்று. யார் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும் சரி, என்ன முயற்சி செய்தாலும் சரி, தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. நான் வழக்கம் போல பிரசாரத்தில் ஈடுபடுவேன். 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் நாற்காலியில் மோடி உட்கார வாய்ப்பே கிடையாது.

கோவில்பட்டி சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடப் போவதாக பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

Source link