சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க தேஜ கூட்டணி கட்சிகள் இணைந்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க தேஜ கூட்டணி கட்சிகள் இணைந்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவரது அறிக்கை;

திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் அதிகரித்து விட்ட பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய கையாலாகாத திமுக அரசைக் கண்டித்தும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை மீட்டெடுக்கவும், நாளைய தினம்(மார்ச் 17), தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

தமிழகத்தில், பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை இருக்கிறது. போதைப் பொருள்கள், நமது இளைஞர்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து போய்விட்டது.

இந்த நிலையை மாற்ற தமிழக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது. நமது சகோதரிகளின் பாதுகாப்பிற்காகவும், நமது இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பாதுகாப்பான தமிழகத்தை மீட்டெடுப்பதற்காகவும் நடைபெறவுள்ள இந்த ஜனநாயகப் போராட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Source link