விருதுநகர்: விருதுநகரில் இன்று நடந்த வாகன சோதனையில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட

விருதுநகர்: விருதுநகரில் இன்று நடந்த வாகன சோதனையில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, மாநிலம் முழுதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக்குழுவினர் தீவிர வாகன தணிக்கை செய்து கணக்கு காட்டப்படாத பணம், நகை மற்றும் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 2 நாட்களில் மட்டும் 23.28 கோடி ரூபாய் மதிப்பு ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.

இந்நிலையில், மதுரையில் இருந்து நாகர்கோவில் மார்த்தாண்டம் நோக்கி சென்ற கூரியர் வேனை விருதுநகரில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 14.02 கோடி மதிப்பிலான தங்கம், வெற்றி, வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாஜலபுரம் போலீஸ் சோதனைச்சாவடியில் நடந்த சோதனையில் மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட 90 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து வடிவேலிடம் ஒப்படைத்தனர்.

இன்று ஒரே நாளில் விருதுநகரில் மட்டும் 15 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Source link