புதுடில்லி: விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளிடம் ஜன்னலோர இருக்கை, முன்பக்க இருக்கை என குறிப்பிட்டு தனியாக கட்டணம் வசூலிப்பதற்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
*விமானங்களில் 60 சதவீதம் இருக்கைகளை தேர்வு செய்ய தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது.
* விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது.
*ஒரே எண்ணில் பதிவு செய்யும் பயணிகளுக்கு அடுத்தடுத்த இருக்கைகளை ஒதுக்க வேண்டும்.
*விமான பயணம் தொடர்பான விவரங்களை பயணிகளுக்கு அவர்களது தாய் மொழியில் வழங்க வேண்டும்.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மூலம் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு விமானப் பயணத்தை மேலும் எளிதில் அணுகக்கூடியதாகவும், வெ ளிப்படையானதாகவும் மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
பல விமான நிறுவனங்கள், பயணச்சீட்டு முன்பதிவு செய்த பிறகோ அல்லது இணையவழிப் பதிவின் போதோ, தங்களுக்கு விருப்பமான இருக்கையைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கூடுதல் கட்டணங்களை வசூலித்து வந்தன.
இந்தப் புதிய உத்தரவுகள் பயணிகளுக்கு நியாயமான விலையில் பயணத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
