வட கொரிய தேர்தலும், ‘வசமான’ 99.93% வாக்குகளும்

இது தான் ‘டேக் அவே’

தேர்தலில் 0.07% தவிர, முழு ஆதரவும் கிம் பக்கமே என்கிறபோது, இந்தத் தேர்தல் ஏன் செய்தியாகிறது என்றால், உட்கட்சி ரீதியாக சில முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மக்கள் உச்ச அவைக்கு தேர்வாகியுள்ள பிரதிநிதிகளில் 70%-க்கும் மேற்பட்டோர் புதிய முகங்கள். இது அரசியல் அமைப்புக்குள் ஒரு பெரிய அளவிலான மறுசீரமைப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.

இந்தப் புதிய பிரதிநிதிகளுடன் மார்ச் 22 நடைபெறும் கூட்டத்தில் வட கொரியாவின் அரசியலமைப்பில் முக்கிய திருத்தங்களைக் கொண்டுவருவது பற்றியும், முக்கிய தலைமைப் பொறுப்புகள் பற்றியும் குறிப்பிடத்தக்க முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இதைக் கொண்டு கிம் பழைய அதிகார மையங்களை ஒழித்துவிட்டு தனக்கு விசுவாசமான நபர்களைக் கொண்டுவரக் கூடும் என்றும் கூறப்படுகிறது. அதுவும் குறிப்பாக, அந்த விசுவாசிகள் பட்டியலில் கிம்மின் நெருங்கிய கூட்டாளியான ஜோ யோங் வொன் பெயர் அடிபடுகிறது. அவர் நாடாளுமன்றத்தில் முக்கியப் பொறுப்பைப் பெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

Source link