நிதி சேவைகளை அதிகம் பயன்படுத்தும் இடங்களில் இந்த வசதி பரவலாக்கப்படும் என்று கூறப்படுகிறது. செபி, ரிசர்வ் வங்கி (RBI), IRDAI மற்றும் PFRDA ஆகியவற்றின் கீழ் பல்வேறு நிதி நிறுவனங்கள் உள்ளன. அதில் நீங்கள் CKYC செய்து கொள்ளலாம். நீங்கள் எந்தவொரு வங்கியிலும் கணக்கு வைத்திருந்தாலும் அந்த வங்கியின் கிளைக்குச் சென்று CKYC செய்து கொள்ளலாம். CKYC செயல்முறை முடிவடைய 15 நாட்கள் வரை ஆகலாம்.
CKYC எண் ஏன் அவசியம்?
ஒவ்வொரு முறையும் புதிய வங்கி கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட், அல்லது காப்பீடு வாங்கும்போது KYC ஆவணங்களை (ஆதார், பான் போன்றவை) சமர்ப்பிக்கும் சிரமம் தவிர்க்கப்படுகிறது.
உங்கள் தகவல்கள் மத்திய தரவுத்தளத்தில் (CERSAI) பாதுகாப்பாக இருப்பதால், புதிய சேவைகளை மிக விரைவாகவும், எளிதாகவும் பெற முடியும்.
உங்கள் தகவல்கள் அனைத்திந்திய அளவில் ஒரே சீராக (Standardization) பராமரிக்கப்படுகிறது.
உங்களின் முகவரி அல்லது மொபைல் எண் மாறினால், ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தில் அதை மாற்றினால் போதும்; அந்தத் தகவல் தானாகவே மற்ற நிறுவனங்களிலும் புதுப்பிக்கப்படும்.
