நாகாலாந்தில் பயங்கரம்: மேகவெடிப்பு, தொடர் மழையால் 11 இடங்களில் நிலச்சரிவு – 8 பேர் பரிதாப பலி – 8 people killed in a landslide in nagaland’s mon district

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது

நாகாலாந்தில் காலை இயற்கையின் சீற்றம் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக, நகரின் 11 வெவ்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நாகாலாந்தில் மாநிலத்தில் கடும் நிலச்சரிவு

வடகிழக்கு இந்தியாவில் அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய பகுதிகளில் கனமழை கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகாலாந்து மாநிலத்தின் மயன்மார் மாவட்டத்தில் அமைந்துள்ள மொன் நகரில் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக காலை 6 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவில் வீடுகள் இடிந் து விழுந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

திமுக, அதிமுக ஆசை தமிழ்நாட்டில் ஒருபோதும் நிறைவேறாது! தவெக MLA ஆர் எஸ் முருகன் அதிரடி பேட்டி

இந்த சம்பவம் குறித்து மொன் மாவட்ட பாஜக எம்பி எஸ். கொன்யாக் கூறுகையில் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து இதுவரை மூன்று பெண்கள், ஒரு ஆண் என மொத்தம் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு 12 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன என்று அவர் கூறினார். நகரின் பிற பகுதிகளிலும் வீடுகள் சேதமடைந்துள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.மேலும் இது இரவு முழுவதும் தொடர்ந்து வருவதாக கூறினார். மோன் நகரம் மற்றும் திஜித் ஆகிய பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முடங்கிய போக்குவரத்து.. துண்டிக்கப்பட்ட நெட்வொர்க்:

மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மொன் மாவட்டத்தின் பல பகுதிகள் சாலை போக்குவரத்து, மற்றும் இணையதள சேவை உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் எந்த தொடர்ப்பும் இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சாலைப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதோடு, மொபைல் நெட்வொர்க் மற்றும் இணையச் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளவும், மக்கள் அவசர உதவிக்குத் தொடர்பு கொள்ளவும் ஏதுவாக மொபைல் நெட்வொர்க்கை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பாஜக எம்பி எஸ். பாங்னான் கொன்யாக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்டை மாவட்டங்களான லாங்லெங் மற்றும் மொகோக்சுங் ஆகிய பகுதிகளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மொகோக்சுங் மாவட்டத்தின் துலி பகுதியிலும் திடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள், மேம்பாலங்கள் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

நிவாரண நிதி அறிவிப்பு:

இந்த துயரச் சம்பவத்திற்கு நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 74,000 ரூபாயும் மாநில அரசு சார்பில் நிவாரண உதவியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் மீட்புப் படை

தற்போது பேரிடர் மேலாண்மை குழுக்கள், மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), அஸ்ஸாம் ரைபிள்ஸ் ராணுவத்தினர், உள்ளூர் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் தற்காலிக தங்குமிடம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, அசாம் மாநிலம் குவஹாத்தியிலும் நிலச்சரிவு ஏற்பட்டு சில வாகனங்கள் சேதமடைந்தன, ஆனால் அதிர்ஷ்டவசமாக அங்கு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Source link