வங்கிகளை விட்டு விலகும் 85 சதவீத கம்பெனிகள் :கேப்ஜெமினி ஆய்வறிக்கை தகவல்

புதுடில்லி:பெருநிறுவனங்களில் 85 சதவீதத்தினர், அடுத்த ஓராண்டில் தங்கள் நிதி நடவடிக்கைகளை வங்கிசாரா நிதி நிறுவனங்களுடன் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சி.ஐ.பி., எனப்படும், ஜே.பி.மோர்கன், பார்க்ளேஸ், கோடக், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிடிஸ் போன்ற நிறுவன மற்றும் முதலீட்டு வங்கிகள், பெருநிறுவனங்களின் ஐ.பி.ஓ., நிறுவன கையகப்படுத்தலில் இணைந்து பணியாற்றுவது வழக்கம்.

ஆனால், விரைவான சேவை, வெளிப்படைத்தன்மை ஆகிய செயல்பாடுகளால், வங்கிசாரா நிதி நிறுவனங்களை 85 சதவீத பெருநிறுவனங்கள் நாட உள்ளதாக, கேப்ஜெமினி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் சேவைகளில் முதலீட்டு வங்கிகள் 23 சதவீதம் வரை மட்டுமே பூர்த்தி செய்வதாகவும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் 58 சதவீத தேவையை பூர்த்தி செய்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source link