இந்தியாவில் இது இளைஞர்களுக்கான காலம், 56 வயது இளைஞர் என கூறுவோருக்கான காலம் இல்லை என ராகுல் காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே டெல்லி அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.56 வயது இளைஞர் என கூறுவோருக்கான காலம் இல்லை. இந்தியாவில் இது இளைஞர்களுக்கான காலம் என்று பிரதமர் பேசிய பேசிய பேச்சு இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மேலும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வரை 19 அமர்வுகளாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தொகுதி மறுவரையறை, சோனம் உண்ணாவிரத போராட்டம், மத்திய அரசுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சிகள் முற்றுக்கை போராட்டம், ராமர் கோயில் காணிக்கை முறைகேடு ஈடுப்பட்டு வரும் நிலையில் இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தாயாரகி உள்ளது. இத்தகைய பரபரப்பான அரசியல் களத்திற்கு நடுவே இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.
சிக்கும் மாஜிக்கள்! திமுக தலைமைக்கு நெருக்கடி?
பொதுவாக ஒவ்வொரு முறையும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் போது பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்றும் அவர் மீடியாக்களிடம் பேசினார். அப்போது, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கத் திட்டமிட்டு வருவது குறித்தும், ராகுல் காந்தியின் அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் கடுமையாக விமர்சித்தார்.
56 வயது ஆகியும் இளைஞரா?
பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் நாடாளுமன்றம் என்பது மக்கள் பிரச்சனைகளைப் பேசி தீர்வு காண்பதற்கான இடம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இங்குள்ள சில தலைவர்கள் இன்னும் தங்களை ‘இளைஞர்கள்’ என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 56 வயதை எட்டிய பிறகும் கூட ஒருவருக்கு அரசியல் முதிர்ச்சி வரவில்லை என்றால், அவர் எப்போதுதான் நாடாளுமன்றத்தின் மாண்பைப் புரிந்து கொள்வார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
மேலும் வயதாகிவிட்டாலும் இன்னும் தன்னை ஒரு வாலிபராகவே காட்டிக்கொள்ள விரும்பும் அந்தத் தலைவர், ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, வெறும் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துவதையே தனது முழுநேர அரசியலாக வைத்திருக்கிறார். இந்த மழைக்கால கூட்டத்தொடரிலாவது எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்று நம்புகிறேன்” என பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்தார்.
ராகுலை மறைமுகமாக விமர்சித்த பிரதமர்
மழைக்கால கூட்டத்தொடரில் நீட் விவகாரம், விலைவாசி உயர்வு எனப் பல பிரச்சனைகளைக் கையில் எடுத்து அரசை வளைக்க எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்திருந்த நிலையில், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே ராகுல் காந்தியை “56 வயது இளைஞர்” என பிரதமர் மோடி விமர்சித்திருப்பது காங்கிரஸ் முகாமைக் கடுமையாக உசுப்பிவிட்டுள்ளது. பிரதமரின் இந்த விமர்சனத்திற்கு நாடாளுமன்றத்திற்குள்ளேயே பதிலடி கொடுப்போம் என காங்கிரஸ் எம்பிக்கள் கொந்தளித்து வருகின்றனர்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நாட்டின் நலனுக்காக ஒரு பயனுள்ள கூட்டத்தொடரை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார். மேலும் நம்மிடம் சரியான ஆதாரங்களும், உண்மைகளும் இருக்கும்போது, அங்கு வீணாகப் புயலைக் கிளப்ப வேண்டிய அவசியமே இல்லை. உங்களுடைய வாதத்தில் நியாயமும் உண்மையும் இருந்தால், மிக அமைதியான முறையிலேயே உங்களது குரலை அவையில் பதிவு செய்ய முடியும். அதற்குத் தேவையில்லாமல் கத்தவோ, கூச்சல் குழப்பம் விளைவிக்கவோ வேண்டியதில்லை enr
Source link
