அவரது கண்காணிப்பில் காவல்துறை இல்லை. டிஜிபியை கூட நியமிக்க முடியவில்லை. ஆட்சி மாற்றம்தான் இதற்கு முடிவாக இருக்கும். இவர் அவர் கூறினார். அப்போது பாஜக மாவட்ட தலைவர்கள் சரவண கிருஷ்ணன், சித்ராங்கதன் ஆகியோர் உடனிருந்தனர்.
மாணவியின் தந்தை உறுதி
இதனிடையே கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை சுப்புராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது மகள் இறந்ததற்கு காரணமான குற்றவாளி கைது செய்யப்பட்டால், மகளின் உடலை வாங்க தயாராக உள்ளேன். கொலை செய்யப்பட்டு இன்றுடன் 9 நாட்களாகிறது.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் தான் உடலை வாங்க வேண்டும் என்ற முடிவில் தான் இருக்கிறேன். பிரேத பரிசோதனை அறிக்கை காவல் நிலையம் வந்துள்ளது. அதனை இனிமேல்தான் வாங்க வேண்டும்.
காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம். எனக்கு யார் மீதும் சந்தேகம் கிடையாது. இந்த ஊரில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதால் யார் மீதும் சந்தேகப்பட முடியாது. ஆனால் அரசுத் தரப்பில் நான் எதிர்பார்த்த நடவடிக்கை இல்லை. ஆனால், எனக்கு நிச்சயம் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
