டெல் அவிவ்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள், கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதிகள் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புகள் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை மேற்கொண்டன. இதைத் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 900-க்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள கட்டிடம் மீது இஸ்ரேல் படை கள் தாக்குதல் நடத்தின. 6 விநாடிகளில் அங்கு கட்டப்பட்டிருந்த அந்த பெரிய கட்டிடம் தூள் தூளானது.
