இது குறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை சமூக வலைதளத்தில், ”நீங்கள் ஒரு புதிய தொடக்கத்துடன் உங்கள் தாய் நாட்டுக்கு செல்லலாம். சிபிபி ஹோம் என்ற செல்போன் செயலியைப் பயன்படுத்தி நீங்களாகவே உங்கள் நாட்டுக்கு செல்ல முன்வரும் போது இலவச விமான டிக்கெட் மற்றும் வெளியேறுவதற்கான 2,600 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.2.41 லட்சம்) போனஸ் தொகையைப் பெற்றிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு வருவோருக்கு எந்தவித சட்டச் சிக்கலும் இல்லாமல் அவர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆவணமின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருப்போரை கண்காணிப்பதற்கான செலவுகளைக் குறைக்கவும், காவல், நீதித்துறை அமைப்புகளின் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், அதே நேரத்தில் முறைசார்ந்த நாடு கடத்தலுடன் தொடர்புடைய சட்டரீதியான தண்டனைகளைத் தனி நபர்கள் தவிர்க்கவும் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
