ஆகஸ்ட் 5 பட்ஜெட்… ஆகஸ்ட் 6 வேளாண் பட்ஜெட்! தமிழக சட்டப்பேரவையில் நேரலைக்கு ஏற்பாடு!

முதல்வர் விஜய் தலைமையில் வெளியாக போகும் முதல் பட்ஜெட் இது என்பதால், ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனமும் பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வரப் போகிறது என்பதை இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்து இன்று (ஜூலை 21) சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பில், “2026-27 நிதி ஆண்டிற்கான தமிழக வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 10 மணிக்குச் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும். இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட் தாக்கலை தமிழக மக்கள் நேரலையில் பார்க்க ஏற்பாடு செய்யப்படும். வக்களித்தவர், வாக்களிக்காதவர் என அனைவரும் போற்றும் வகையில் பட்ஜெட் இருக்கும். வந்தே மாதரம் குறித்த விவகாரத்தில் பேரவையில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும்” என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் முதல்வர் விஜய்யை ஒருமையில் விமர்சித்ததற்காக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து பேசி சபாநாயகர் சட்டப் பேரவைக்குள் எம்எல்ஏக்களை கைது செய்யத் தான் பேரவைத் தலைவரின் அனுமதி தேவை. சட்டப்பேரவைக்கு வெளியில் கைது நடவடிக்கையை மேற்கொண்டால், அதற்கு பேரவைத் தலைவரின் அனுமதி தேவையில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

Source link