அதிவேக இன்டர்நெட் வசதிக்கும், நவீன தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்ற தென் கொரியாவின் தலைநகரான சியோல் (Seoul), தற்போது உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. மக்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை ஒதுக்கி வைத்துவிட்டு, புத்தகங்களை வாசிக்க ஊக்குவிக்கும் வகையில் ‘சியோல் வெளிப்புற நூலகம்’ (Seoul Outdoor Library) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
தி.மு.க கட்சி அமைப்பில் புதிய மாற்றம் எப்போது? சீரமைப்புக் குழுவுடன் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
இதன் மூலம் அந்நகரத்தின் முக்கிய பூங்காக்கள் மற்றும் பொதுச் சதுக்கங்கள், புத்தக அலமாரிகள், ‘பீன் பேக்’ (Bean bags) இருக்கைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நிறைந்த திறந்தவெளி வாசிப்பு அறைகளாக மாற்றப்பட்டுள்ளன.
வெளிக்காற்றில் புத்தகம் வாசிப்பதால் மூளைக்குக் கிடைக்கும் நன்மைகள்
அமைதியான திறந்தவெளி இடங்களில் வாசிக்கும்போது கவனச்சிதறல் இன்றி மூளையின் பல பகுதிகள் ஒரே நேரத்தில் செயல்படுகின்றன. இது கவனம், மொழித் திறன், நினைவாற்றல் மற்றும் கற்பனைத் திறனை வளர்க்கிறது. சோசியல் மீடியாவில் தொடர்ச்சியாக ‘ஸ்க்ரோல்’ செய்வதற்குப் பதிலாக, புத்தகங்களை வாசிப்பது மூளையை ஒரே விஷயத்தில் நீண்ட நேரம் கவனத்தைச் செலுத்த வைக்கும். திறந்தவெளியில் மற்றவர்கள் வாசிப்பதைப் பார்க்கும்போது நமக்கும் வாசிக்கும் ஆர்வம் இயல்பாகவே ஏற்படும். அமைதியான சூழல் மன அழுத்தத்தைக் குறைத்து, சமூக உணர்வை மேம்படுத்துகிறது.
‘ஸ்க்ரோலிங்’ பழக்கத்திற்கு ஒரு சிறந்த மாற்று
ஸ்மார்ட்போன்கள் மூளையைத் தொடர்ச்சியான அறிவிப்புகள் மற்றும் வீடியோக்களுக்குப் பழகச் செய்து, இடைவிடாத தூண்டுதலை எதிர்பார்க்க வைக்கின்றன. ஆனால் புத்தகங்கள், மூளையைத் தகவல்களை ஆழமாகச் செயலாக்க அனுமதிக்கின்றன. மேலும், திரையைப் பார்க்கும் நேரத்தைக் குறைப்பது, கண்கள் மற்றும் மூளைக்கு ஓய்வளித்து, டிஜிட்டல் கண் சோர்வு, தூக்கமின்மை மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றிலிருந்து விடுதலை தருகிறது.
சியோலின் 3 முக்கிய திறந்தவெளி வாசிப்பு மையங்கள்
சியோல் வெளிப்புற நூலகம் (Seoul Outdoor Library): சியோல் சிட்டி ஹால் முன்பாக அமைந்துள்ள பிரதான மையம். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமான வாசிப்பு மண்டலமாக இது இயங்குகிறது.
செங்யேச்சியோன் சிற்றோடை வாசிப்பு மண்டலம் (Cheonggyecheon Stream): நகரின் பரபரப்பிற்கு இடையே, ஓடும் ஆற்றின் கரையில் அமைதியாகப் புத்தகம் வாசிக்க ஏற்ற இடம்.
ஹங்கங் வெளிப்புற நூலகம் (Hangang Outdoor Library): ஹான் நதிக்கரையில் உள்ள பூங்காக்களில் திறந்தவெளிப் புல்வெளிகள் மற்றும் நதிப் பார்வையுடன் இயற்கைச் சூழலில் வாசிக்கும் அனுபவத்தைத் தருகிறது.
