புதுடெல்லி: ஈரான் போர் தொடங்கிய பிப்.28 முதல் இதுவரை சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் இந்தியர்கள் மேற்கு ஆசியாவில் இருந்து தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல்கள் குறித்து அமைச்சகங்களுக்கு இடையேயான விளக்கக் கூட்டம் டெல்லியில் இன்று (மார்ச் 19) நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (வளைகுடா விவகாரங்கள்) அசீம் மகாஜன், ‘‘மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக சில நாடுகளில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
எனினும், அதன் அண்டை நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதை அடுத்து ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. பிப்.28 முதல் இந்த பிராந்தியத்தில் இருந்து சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இந்தியா திரும்பியுள்ளனர்.
