இந்தியாவில் உள்ளூர் திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் பிராந்திய மொழிகளுக்குக் கிடைக்கும் வரவேற்பால் தற்போது ஓடிடி (OTT) தளங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற முன்னணி தளங்கள் இந்திய சந்தையில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்கின்றன. சுமார் 97% பயனர்கள் தங்கள் மொபைல் போன்களிலேயே ஸ்ட்ரீமிங் செய்கின்றனர், அதே நேரத்தில் 7 கோடிக்கும் அதிகமானோர் பெரிய திரைகளில் (Smart TVs) பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.
OTT தடை :
இதில் பல ஓடிடி தளங்களில் ஆபாசமான கண்டெண்ட் இருப்பதோடு, நம் நாட்டில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறும் வகையிலும் உள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு பல்வேறு புகார்கள் சென்ற நிலையில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் விதிமீறிய ஓடிடி தளங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
மக்களவையில் ராஜாபாவு பராக் பிரகாஷ் வாஜே எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறைக்கான இணையமைச்சர் எல்.முருகன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
