மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் எதிரொலி; யு.ஏ.இ.,யில் கட்டுப்பாடு

துபாய்: ரம்ஜான் பண்டிகையின் போது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்படும் தொழுகைகளை திறந்தவெளியில் நடத்தாமல், மசூதிக்குள் நடத்தும்படி அந்நாட்டு அரசின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான பொது ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், ரம்ஜான் மாதத்தின் முடிவை குறிக்கும் வகையில் ஈத் – அல் – பித்ர் தொழுகைகள், பாரம்பரியமாக பெரிய கூட்டமாக நடத்தப்படும். இது பெரும்பாலும் திறந்தவெளியில் நடத்தப்படுவதே வழக்கம். இந்நிலையில், மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதையடுத்து, பிராந்திய சூழல் மற்றும் பாதுகாப்பை கருத்தில் வைத்து, பொதுமக்களின் நலன் கருதி, ரம்ஜான் தொழுகைகளை மசூதிக்கு உள்ளேயே நடத்தும்படி, எமிரேட்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக திறந்தவெளி மைதானங்களில் நடைபெறும் தொழுகைகள் இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான பொது ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்காசிய நாடுகளான குவைத் மற்றும் கத்தாரும் இதே போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

Source link