“கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?”

தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்? என தமிழக முதல்வர் ஜோசப் விஜயிடம் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடகப்பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு முதல்வருக்குச் சில கேள்விகள். தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்? தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்? அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது? தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?” என கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். 

Source link