250 கம்பெனி துணை ராணுவப் படை விரைவில் வருகை: அர்ச்சனா பட்நாயக் தகவல்

அந்த குடியிருப்புகளில் 3 நாட்களுக்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்ற நிலையிருப்பதால் சிலர் ஒப்புக்கொள்வதில்லை ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

அப்படி செய்தாலும் அந்த ஆவணங்கள் அனைத்தையும் நகலெடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நேரில் வந்து தாக்கல் செய்வது அவசியம். தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 50 கம்பெனி துணை ராணுவத்தினர் ஏற்கெனவே தமிழகத்துக்கு வந்துள்ளனர்.

மேலும் 250 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவுள்ளனர். கூடுதலாக தேவைப்பட்டால் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுபெறலாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் இல்லை. ஒரு கம்பெனியில் 70 முதல் 90 பேர் வரை துணை ராணுவத்தினர் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்

Source link