நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிராக சிஜேபி கட்சியினர், மாணவர் அமைப்பினர் இளைஞர்கள் உள்ளிட்ட பல ஆயிரம் பேர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களைக் கட்டவிழ்த்துவிட்டனர்.
இதனால், இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் பல மாநிலங்களில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று (23-07-26) நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் உள்ள எழும்பூரில் போராட்டம் நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் கலந்துகொண்டு பேசிய பாடகர் ”சமீபத்தில் நீட் தேர்விற்கு எதிராகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாகவும் நான் போராட்டத்தில் ஈடுபட்டேன். அப்போது, தமிழக காவல்துறையினர் என்னைக் கைது செய்தனர். பின்பு, என்னிடத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்ததால் தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். இது உங்களுக்குத் தேவையில்லாத வேலை. நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்? என்று கேட்டார்” எனக் கூறினார்.
