​நீட் : 65 எம்பிக்கள் கோரிக்கை, அமித் ஷா உறுதிமொழி – உண்ணாவிரதத்தைக் கைவிட்ட சோனம் வாங்சுக் – sonam wangchuk called off his hunger strike held in the presence of j.p. nadda.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்களுடன் இணைந்து கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் சோனம் வாங்சுக் காலவரையறை அற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இவருக்கு ஆதரவாக மாணவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.போராட்டம் ஒரு கட்டத்தில் 15 நாட்களை கடந்த நிலையில், சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்தது.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு

உடனே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் போராட்டத்தை தொடர்ந்தால்,எந்த நேரதிலும் சோனம் வாங்சுக் உயிரிழக்க நேரிடும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்படி,உண்ணாவிரத போராட்டத்தில் இருந்த சோனம் வாங்சுக்வை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.இருப்பினும் அங்கும் மருந்துகள் எடுத்துக் கொள்ளாமல் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?

இதனைத்தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு விவகாரத்தை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை காவல்துறையினர் வழிமறித்து தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. பின்னர், போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், நாடு முழுவதும் இது பெரும் பரபரப்பையும் அரசியல் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் வெடித்த மாணவர்கள் போராட்டம்

தொடர்ந்து நாளுக்கு நாள் போராட்டத்தை வலுத்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி உள்ளிட்ட அனைத்துகட்சித் தலைவர்களும் பிரதமர் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டத்தில் ஊடுருவகாரர்கள் புகுந்ததால் திசைமாறியதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, மீண்டும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த பரப்பான சூழலில், வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்குவதற்கும், வழக்குகளை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்களைஇதற்காக சிறப்பு விசாரணை நீதிமன்ற அமைக்க முடிவு செய்யப்படும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு இருந்தார்.

இதனைத் தொடர்ந்து , குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் நேரில் சந்தித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த உறுதிமொழிகளின் அடிப்படையில், அமைச்சர்கள் வழங்கிய பழச்சாற்றைக் குடித்து வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.

வன்முறையைத் தவிர்க்கவே இந்த முடிவு

உண்ணாவிரதத்தை முடித்த பின்னர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சோனம் வாங்சுக்:மத்திய அரசுடன் பல கட்டங்களாக நடத்தப்பட்ட தீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகும், நாட்டில் தேவையற்ற வன்முறைகள் வெடிப்பதைத் தவிர்க்கும் நோக்கிலுமே இந்த முடிவை எடுத்துள்ளேன். சுமார் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் வந்தும், கடிதம் மூலமாகவும் போராட்டம் வேண்டாம் என்று கோரிக்கை வைத்தனர்.

அரசு விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து விரைவில் விரிவான வீடியோ மூலம் விளக்கமளிக்கிறேன். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் வன்முறைக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

பிரதமர் மோடி வாழ்த்து

சோனம் வாங்சுக் போராட்டம் கைவிட்டது குறித்துப் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “வாங்சுக் அவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி, விரைவாகப் பழைய உடல்நலத்தையும் எடையையும் மீட்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் போராட்டம்

சோனம் வாங்சுக் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டாலும், நீட் விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையோடு மாணவர்கள் டெல்லியில் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Source link