தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, கோடைக்கால சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசர உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி, அவசர உதவி எண்களைத் தெரியப்படுத்த வேண்டும். அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வெப்ப அலை எச்சரிக்கைகளை முறையாக வெளியிட்டு, குடிநீர் மற்றும் மருத்துவ முகாம்களை ஆங்காங்கே ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே பெரும் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
