அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாடு உடல்ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், தனிமை, பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகிய உணர்வுகளுக்கு வழிவகுக்கும் என அண்மையில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வெளியான இந்திய பொருளாதார ஆய்வறிக்கையும் (2025-26), சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையே ஸ்மார்ட்போன்களின் அதீத பயன்பாடு சங்கடம் அளிப்பதாக தெரிவித்தது. அதீத பயன்பாட்டினால் கவனம் சிதறல், தூக்கமின்மை, பதற்றம் மற்றும் கல்வி சார்ந்த மன அழுத்தம் ஆகியவை ஏற்படுவதாக தெரிவித்தது. குழந்தைகளின் டிஜிட்டல் பழக்கவழக்கங்களை வடிவமைப்பதிலும், அவர்கள் இணையதளங்களில் உள்ள தீய உள்ளடக்கங்களைக் காண்பதைத் தவிர்க்க எளிய சாதனங்கள் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிப்பதிலும் பள்ளிகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
