BJP vs CJP..! ஒரு நாள் அவகாசம் கேட்ட மத்திய அரசு..! தீவிரமடையும் நீட் போராட்டம்.!

பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் நடுநிலையானதாக இருக்க வேண்டும் என காக்ரோச் கட்சியினர் கேட்டுக் கொண்டனர். இதனால் டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு கிளப் வளாகத்த்தில் பேச்சுவார்த்தை நடந்தது. மத்திய அரசுடன் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் காக்ரோச் ஜனதா கட்சியினர் 3 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தனர்.

1. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும்.

2. நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட அனைத்து மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

3. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கூடாது மற்றும் மாணவர்களைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காக்ரோச் ஜனதா கட்சியின் 2 கோரிக்கைகள் மீது, மத்திய அரசு சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இருதரப்பினர் இடையே 3-வது முறையாக நாளை (ஜூலை 25) மீண்டும் பேச்சுவார்த்தயில் ஈடுபட உள்ளனர்.

டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை கடந்த 3 நாட்களாக 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை டெல்லி மெட்ரோவும் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விரைவு நீதிமன்றம்:

நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவைத் தடுக்க சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என மத்திய அரசு நேற்று தெரிவித்தது. இதற்கான மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை 27-ல் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று விரைவு நீதிமன்றத்தை அமைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

Source link