இ-கேஒய்சி (E-KYC) மோசடியைத் தடுக்கிறது, போலி அட்டைகளை நீக்குகிறது, மேலும் அரசாங்கம் பங்கீட்டுப் பொருட்களை மிகவும் எளிதாக வழங்க உதவுகிறது.
ரேஷன் கார்டு இ-கேஒய்சி-யின் முக்கிய நன்மைகள் என்ன தெரியுமா :
சரியான பயனாளரின் விபரங்களை உறுதி செய்கிறது. மோசடியான கோரிக்கைகளையும் போலி ரேஷன் அட்டைகளையும் தடுக்கிறது.
தடையற்ற பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது .மானிய விலையில் உணவு தானியங்கள் தொடர்ந்து கிடைப்பதற்கு இது கட்டாயமாகிறது.
ரேஷன் கார்டுதாரர்கள், ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் இ-கே.ஒய்.சி. விரல் ரேகையை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. .ஆகவே இதுவரை விரல் ரேகை பதிவு செய்யாத ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டுடன் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று ஜூலை 31க்குள் கைரேகை பதிவு செய்ய வேண்டும். மேலும் இ-பிஓஎஸ் (e-POS) இயந்திரத்தில் கைரேகை அல்லது விழித்திரை பதிவு மூலம் இ-கேஒய்சி முடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
வெளியூரில் வசிப்பவர்கள் என்ன செய்யலாம் :
ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்கள் பணி நிமித்தமாக வெளியூரில் தற்காலிகமாக வசிப்பவர்கள் ரேஷன் கார்டு இ-கேஒய்சி (e-KYC) செய்ய, அவர்கள் இருக்கும் இடத்திலேயே உள்ள நியாயவிலைக் கடை அல்லது ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தலாம். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் வெளியூர்களில் உள்ள கடைகளிலும் கைரேகை சரிபார்ப்பு செய்யப்படுகிறது
