அதே சமயத்தில் கர்நாடகாவிலும் பருவ மழை குறைவு என்பதால், காவிரி நீர் திறந்து விட முடியாத நிலைக்கு கர்நாடக அரசும் தள்ளப்படுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கோடை காலங்களில் மழை வெளுத்து வாங்கியது. ஆனால், இந்தாண்டு கோடை காலத்தில் மழை எட்டிக்கூட பார்க்கவில்லை.
‘எல் நினோ’ தீவிரமடையும் ஆண்டுகளில், தென்மேற்கு பருவமழை குறைந்து இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் பகல் நேர வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வறட்சி அபாயம் :
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் நீர்வளத்துறையின் கீழ் மொத்தம் 90 அணைகள், 14,141 ஏரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் 224 டிஎம்சி கொள்ளளவு கொண்ட தமிழ்நாட்டின் அணைகளில் தற்போது 71.2 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. அணைகளின் நிலையே பரிதாபமாக உள்ள நிலையில் ஏரிகளின் நிலை அதைவிட பரிதாபமாக உள்ளது. அதாவது, 14,141 பாசன ஏரிகளில் ஏற்கனவே 3,483 பாசன ஏரிகள் வறண்டுவிட்ட நிலையில் 6,127 ஏரிகள் வறண்டு விடும் அபாயகரமான கட்டத்தில் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
