தமிழகத்தில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் 23 மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க, 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு 18 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2025) அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த ஆண்டும் தொடரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ கடன் திட்டத்திற்கான தகுதிகள்
சுயதொழில் மேற்கொண்டு வருமானம் ஈட்ட விரும்பும் பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
* தமிழ்நாட்டில் வசிக்கும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
* விண்ணப்பதாரர் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
* குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் பெண் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியின் உறுப்பினராக இருக்க வேண்டியது கட்டாயம்.
