இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றனர். மேலும் இன்று திமுக மற்றும் காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை முடிவிற்கு வருகின்றதாம். அநேகமாக இன்று இரவுக்குள் இறுதி முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் இருக்கும் 30 தொகுதிகளை காங்கிரஸ்மற்றும் திமுகவினர் சுமுகமாக பிரித்துக்கொண்டதாக தெரிகின்றது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 15 தொகுதிகளை காங்கிரஸ் கட்சியினரும் 15 தொகுதிகளை திமுகவினரும் பிரித்துக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன.
மேலும் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் கிடைக்காததால் அவர்கள் தனித்து போட்டியிட முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால் இத்தகவல் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இருப்பினும் இப்படி ஒரு தகவல் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் தலைமை குறித்து இன்னும் எந்த ஒரு தகவலும் இல்லை. யாருடைய தலைமையில் புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமையப்போகிறது என்பது தெரியவில்லை.
புதுச்சேரியில் இருக்கும் 30 தொகுதிகளில் தலா 15 தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் திமுக பிரித்துக்கொள்வார்கள் என்பது அனைவரும் எதிர்பார்த்தது தான். இருப்பினும் யாருடைய தலைமையில் இந்த கூட்டணி அமையும் என்பதை தெரிந்துகொள்ள தான் புதுச்சேரி மக்கள் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கின்றனர். இருவரும் தலைமையை விரும்புவதால் யாருடைய தலைமையில் இக்கூட்டணி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
தற்சமயம் தொகுதிப்பங்கீடு முடிவாகி இருப்பதாக தெரிகின்றது. எனவே தலைமையையும் இவர்கள் முடிவெடுத்திருப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே திமுகவினர் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினின் வழிகாட்டுதலின் பெயரில் பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறினார்கள். எனவே தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினின் அறிவுரையின்படியே திமுகவினர் செயல்படுவார்கள் என தெரிகின்றது.
காங்கிரஸ்- திமுக தொகுதி பங்கீடு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி! திமுகவுக்கு காலையில் வந்த குட்நியூஸ்
தமிழகத்தில் கூட காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை திமுக நிராகரித்ததாக தெரிகின்றது. மேலும் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறி வந்தனர். இதற்கிடையில் தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணி அமைத்ததை போல புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமையுமோ ? என்ற கேள்வியும் எழுகின்றது. எதுவாக இருந்தாலும் இன்றைக்குள் ஒரு முடிவு எட்டப்படும். அந்த முடிவை எதிர்பார்த்து புதுச்சேரி மக்கள் ஆவலாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
