தெஹ்ரான்: அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எஃப்-35 ரக போர் விமானத்தைத் தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் மிகவும் ஆற்றல் வாய்ந்த இத்தகைய போர் விமானத்தை தாக்கிய முதல் நாடு தாங்கள்தான் என்றும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
மத்திய ஈரானின் வான்வெளியில் அமெரிக்க விமானப் படையின் எஃப்-35 ஸ்டெல்த் ரக போர் விமானத்தைத் தாக்கியதாக ஈரான் ராணுவம் (IRGC) தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பானதாகக் கூறப்படும் காணொலியும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கைல், ‘உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:50 மணிக்கு ஈரான் ராணுவத்தின் மேம்பட்ட, நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்த விமானம் தாக்கப்பட்டுள்ளது. அந்தப் போர் விமானத்தின் நிலைமை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
