CJP Protest: `நாம் சாதித்து விட்டோம்!' – தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து அபிஜீத் திப்கே

மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சி.ஜே.பி (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே வரவேற்று பேசியிருக்கிறார்.

தர்மேந்திர பிரதான்

இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் சாதித்துவிட்டோம். ஜனநாயகத்தின் வெற்றி இது. உலகம் தானாக தலைகுனியாது; தலைகுனிய வைக்கத் தெரிந்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்கு மத்தியில் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

CJP அபிஜித் தீப்கே
CJP அபிஜித் தீப்கே

இந்த ராஜினாமாவை, மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த முக்கிய வெற்றியாக சி.ஜே.பி அமைப்பு பார்க்கிறது. மேலும், கல்வித் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்துகிறது. அது தொடர்பாக மத்திய அரசுடன் சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது.

Source link