இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், அவற்றின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
பிரீமியம் பெட்ரோல் என்றால் என்ன?
வாகனத்தின் என்ஜினின் செயல் திறன் சிறப்பாக இருப்பதற்காகவும், மேம்பட்ட மைலேஜுக்காகவும் பயன்படுத்தப்படுவது பிரீமியம் பெட்ரோல் எனப்படுகிறது.
குறிப்பாக, சொகுசு வாகனங்கள், ஸ்போர்ட்ஸ் வாகனங்கள், உயர் செயல்திறன் கொண்ட கார்கள் ஆகியவற்றில் இத்தகைய எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. ஆக்டேன் எரிபொருள் அல்லது பவர் பெட்ரோல் என்றும் இது அழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் இந்த விலை உயர்வு, வசதி படைத்த வாடிக்கையாளர்களையே பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
