தி.மு.க-வின் சர்ச்சைக்குரிய பேச்சாளரான குடியாத்தம் குமரனின் இடைநீக்கத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் ரத்து செய்துள்ளார். த.வெ.க மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு எதிராகத் தொடர்ந்து பேசிவந்த குடியாத்தம் குமரன் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை தி.மு.க வாபஸ் பெற்றுள்ளது.
குடை வச்சுக்கோங்க மக்களே… சென்னையில் இன்று இடி- மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரனின் மன்னிப்பை பரிசீலித்த பிறகு அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கட்சியின் ஒழுங்கு மற்றும் அமைப்புக் கட்டுப்பாடுகளை மீறும் வகையில் குமரனின் பேச்சும், நடவடிக்கையும் இருந்ததாகக் கூறி, முன்னதாக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அவரது கருத்துகளும் நடவடிக்கைகளும் விமர்சனங்களை ஈர்த்து, சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தி.மு.க பிரச்சார அணி துணைச் செயலாளரான இவர், இடைநீக்கத்திற்குப் பிறகும் த.வெ.க மற்றும் விஜய்க்கு எதிராகத் தொடர்ந்து பேசி வந்தார். இதேபோல், சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட கட்சியின் சர்ச்சைக்குரிய மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சமீபத்தில் தி.மு.க பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
