சட்டசபை தேர்தலில் கூட்டணி: ராமதாஸ், சசிகலா அறிவிப்பு

விழுப்புரம்: வரும் சட்டசபை தேர்தலை கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளதாக, புதிதாக கட்சி துவக்கியுள்ள சசிகலா, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

தமிழக சட்டசபைக்கு வரும் 23ம் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, காங்கிரஸ் ஒரு கூட்டணியாகவும், அதிமுக பாஜ தனி கூட்டணியாகவும் எதிர்கொள்கின்றன. நாதக, தவெக தனித்து களமிறங்க உள்ளன.

இந்நிலையில் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள சசிகலா, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தார். அப்போது, பாமக கவுரவ தலைவர் மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது சசிகலாவும், ராமதாசும் இணைந்து சட்டசபை தேர்தலை சந்திப்பது என முடிவு செய்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் சட்டசபை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இணைந்து கூட்டணி அமைக்கிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். தமிழகத்தின் துரோக அடையாளங்களை களைந்து மக்கள் நலனையும் தமிழகத்தின் சுயமரியாதை மற்றும் தன்னாட்சி மேம்படுத்தும் விதாக இந்த கூட்டணி செயல்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Source link