இதனால் அவர்களுக்கு (நேட்டோ) ஆபத்து சற்று குறைவுதான். ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியை இயல்பு நிலைக்கு திறக்க அவர்கள் உதவ முன்வரவில்லை. சிறிய ராணுவ தந்திர நடவடிக்கை மூலம் இதை சாத்தியம் செய்திருக்கலாம். அதற்கு மாறாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துவிட்டது என குறை சொல்லி வருகின்றனர். அவர்கள் கோழைகள். அதை நாங்கள் நினைவில் கொள்வோம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வியாழக்கிழமை அன்று ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான சரக்க கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூட்டறிக்கை வெளியிட்டன. இந்த நிலையில் ட்ரம்ப் இதை தெரிவித்துள்ளார்.
