சபாநாயகர் குற்றச்சாட்டு: காங்கிரஸ் மறுப்பு

புதுடில்லி: பிரதமரை தாக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் சதி செய்ததாக சபாநாயகர் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி எம்பி பிரியங்கா கூறியதாவது: சபாநாயகர் பின்னால் பிரதமர் ஒளிந்து கொள்கிறார். அவரது இருக்கை முன்னர் 3 பெண் எம்பிக்கள் நின்று கொண்டு இருந்ததால், அவைக்கு வர அவருக்கு தைரியமில்லை. அரசு விரும்பாததால் அவையில் விவாதம் நடத்தப்படவில்லை.

காங்கிரஸ் எம்பி கார்த்தி

பிரதமர் மோடியிடம் சபாநாயகர் என்ன கூறியிருப்பார் என எனக்கு தெரியாது. ஆனால்,அவையில் விரும்பத்தகாத சூழ்நிலை ஏற்படும் நிலை இருந்தது என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அவையில் இருக்க அனைத்து எம்பிக்களுக்கும் உரிமை உண்டு. எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அரசு அனுமதி தராததால், பார்லிமென்ட இயங்கவில்லை.

சுதா

சபாநாயகர் ஓம்பிர்லா குற்றச்சாட்டு பொய். ராகுல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளுங்கட்சி பதிலளிக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி பார்லிக்கு உள்ளே போராடினோம் என்றார்.

ஜோதிமணி

சபாநாயகர் கருத்து அபத்தமானது. எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ராகுலின் பேச்சுக்கு பயந்து அவரை பேசவிடாமல் தடுத்தனர். எதிர்க்கட்சியினர் யாரும் பேசாமல் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் எப்படி பேச முடியும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Source link