அரசு பேருந்துகளின் மூலம் கட்சியை விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் தவெக-க்கு இல்லை: அமைச்சர் விளக்கம்!

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வென்று, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த மே 10-ம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய்யின் தலைமையில், வருகின்ற ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு தேதிகளில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட்டின் மீது பொதுமக்கள் ஏராளமான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் வெளிவரும் என இல்லத்தரசிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அரசு சார்பில் வாங்கப்பட்டு, வேலைப்பாடு நடந்து வரும் மினி பேருந்துகளில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் அடிக்கப்பட்டதால், ஆளுங்கட்சி தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்கு துறை சார்ந்த அதிகாரிகளும், மின்துறை அமைச்சர் நிர்மல் குமாரும் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்

Source link