திருப்பத்துார்: 'மயான பிரச்னையை தீர்க்க முன்வராத அரசியல் வாதிகள் யாரும், கிராமத்திற்குள் ஓட்டு கேட்டு வர

திருப்பத்துார்: ‘மயான பிரச்னையை தீர்க்க முன்வராத அரசியல் வாதிகள் யாரும், கிராமத்திற்குள் ஓட்டு கேட்டு வர வேண்டாம்’ என, மக்கள் ‘பேனர்’ வைத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

திருப்பத்துார் மாவட்டம் , நாட்றம்பள்ளி அடுத்த ஆத்துார் குப்பம் பஞ்.,க்குட்பட்ட வெள்ளாளனுார் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள், 1996 முதல் அரசு புறம்போக்கு இடத்தை மயானமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த இடத்தை, அதே பகுதியை சேர்ந்த தனி நபர், தனக்கு சொந்தம் என நீண்ட நாட்களாக உரிமை கொண்டாடி வருகிறார். இதனால், இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய மக்கள் செல்லும் போதெல்லாம் தகராறு ஏற்படுகிறது. எனவே, மயான இடத்திற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.

இதுவரை எந்த அரசியல் கட்சியினரும் பிரச்னைக்கு தீர்வு காண முன்வராததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ‘ஓட்டு கேட்டு யாரும் தயவு செய்து எங்கள் ஊருக்குள் வர வேண்டாம்’ என, கிராமத்தில் பேனர் வைத்துள்ளனர்.

Source link