நான் தர்மயுத்தம் நடத்தியதும் தவறு. ஜெயலலிதா காலத்தில் கட்சியில் உள்ள பலருக்கும் பொறுப்புகளை வாங்கித் தந்திருக்கிறேன். சில அமைச்சர்கள் மீது ஜெயலலிதா கோபப்பட்டபோது, அவரை சமாதானப்படுத்தி பதவியில் தொடர வைத்தேன். ஆனால், அப்படிப்பட்டவர்கள் தான் எனக்கு எதிராக ஒட்டுமொத்தமாகத் திரும்பினர்.
தென் தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றுப் பயணம் செய்து மக்களின் எண்ணங்களை அறிந்து வருகிறேன். அங்கெல்லாம், ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்ற எண்ணமே மக்களிடம் உள்ளது. மத்திய அரசிடம் இருந்து உரிய நிதி பகிர்வு இல்லாத நிலையில், மாநில நிதி மூலம் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
