தமிழகத்தில் உயர்ந்த தனியார் பால் விலை – விவரங்கள்

தமிழகத்தில் தனியார் பால் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் ஆரோக்கிய பாலின் விலை உயர்ந்ததால், அதை தொடர்ந்து தற்போது மற்ற தனியா நிறுவனங்களின் பால் விலையும் உயர்த்தி உள்ளன. இந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தி உள்ளன. இது தொடர்ந்து மற்ற பால் பொருட்களின் விலையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் தான் தமிழகத்தின் முக்கிய பால் நிறுவனமான ஆரோக்கியா, தனது பால் மற்றும் தயிர் விலையை 4 ரூபாய் வரை உயர்த்தியது. இதை அப்படியே பின் தொடர்ந்து மற்ற தனியார் நிறுவனங்களான திருமலா , ஹெரிடேஜ் , சீனிவாசா , அமிா்தா, வேதா, சன், ராஜ் , வல்லபா , ஜெர்சி, டொட்லா , மற்றும் சக்ரா உள்ளிட்ட பல தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களும் திடீர் விலை உயர்வை அறிவித்துள்ளன.

Source link