புதுடெல்லி: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2027-ம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா நாடுகளில் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், இந்த தொடருக்கான அணியை கட்டமைக்கும் முயற்சியில் இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் களமிறங்கி உள்ளனர்.
இந்த வகையில், 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் 20 சாத்தியமான வீரர்கள் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் செயல் திறன்களை வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரின் போது, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் கூர்ந்து கவனிப்பார்கள் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
