சிவகாசி அருகே பட்டாசு உற்பத்தியின்போது நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

சிவகாசி / விருதுநகர்: சிவ​காசி அருகே செங்​கமலப்​பட்​டி​யில் தகர ஷெட்​டில் சட்​ட​விரோத​மாக பட்​டாசு உற்​பத்தி செய்​த​போது ஏற்​பட்ட வெடி விபத்​தில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 5 ஆக உயர்ந்​தது.

விருதுநகர் மாவட்​டம் சிவ​காசி அருகே செங்​கமலப்​பட்​டியைச் சேர்ந்த ரவீந்​திரனின் மகன்​கள் ராமச்​சந்​திரன் (40), ராம்​பிர​காஷ் (32). இவ்​விரு​வரும் தங்​களுக்​குச் சொந்​த​மான நிலத்​தில் தகர ஷெட் அமைத்து சட்​ட​விரோத​மாக பட்​டாசு தயாரித்து வந்​தனர்.

நேற்று முன்​தினம் காலை பட்​டாசு உற்​பத்​தி​யில் ஈடு​பட்​ட​போது திடீரென வெடி விபத்து ஏற்​பட்​டது. இதில், அங்கு பணிபுரிந்த ராம்​பிர​காஷ், மீனம்​பட்​டியைச் சேர்ந்த இன்​னாசி​முத்து ஆகியோர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். ராமச்​சந்​திரன் படு​கா​யங்​களு​டன் விருதுநகர் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

இதில் இன்​னாசி​முத்​து​வின் சகோ​தரர் அய்​யப்​ப​ராஜும், அதே கிராமத்​தைச் சேர்ந்த பாண்டித்துரை என்​பவரும் மாயமானதாக பதிவு செய்து போலீஸார் விசாரித்து வந்தனர். உயி​ரிழந்​தோரின் உடல் பாகங்கள் போலீஸா​ரால்சேகரிக்கப்​பட்டு பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்பட்​டன.

இந்​நிலை​யில், விருதுநகர் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த ராமச்​சந்​திரன் நேற்று உயி​ரிழந்​தார். மாய​மான​தாகக் கருதப்​பட்ட அய்​யப்​ப​ராஜ், பாண்​டித்​துரை ஆகியோ​ரும் இந்த வெடி விபத்​தில் உயி​ரிழந்​த​தாக போலீ​ஸார் நேற்று உறுதி செய்​தனர்.

இதையடுத்து வெடி விபத்​தில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 5 ஆக உயர்ந்​தது. நேற்று பிரேதப் பரிசோதனை முடிவடைந்த நிலை​யில், ராமச்​சந்​திரன், ராம்​பிர​காஷ், பாண்​டித்​துரை ஆகியோரது உடல்​கள் உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

இன்​னாசி​முத்​து, அய்​யப்​ப​ராஜ் ஆகியோரது உடல்​களை வாங்க மறுத்து அவர்​களது உறவினர்​கள் விருதுநகர் அரசு மருத்​து​வ​மனை வளாகத்​தில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது, உயி​ரிழந்​தோர் குடும்​பத்​துக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்​டும் என்று கோரிக்கை விடுத்​தனர். அவர்​களிடம் போலீ​ஸார் மற்​றும் வரு​வாய்த் துறை​யினர் பேச்​சு​வார்த்தை நடத்தி சமா​தானம் செய்து அனுப்பி வைத்​தனர்.

Source link