டெல்லி முதல் சென்னை வரை: ராகுல் காந்தியின் அதிரடி அரசியல் நகர்வுகள்!

குறிப்பாக மாணவர் போராட்டங்களின் போது நிகழ்ந்த வன்முறைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார். ஜூலை 20ம் தேதி தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தலைமையில் நாடாளுமன்றத்தை நோக்கி நடந்த பேரணியில் ஈடுபட்டவர்களை கலைக்க தடியடி, கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் புல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.

பேரணியின் போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறையினரின் ஒடுக்குமுறை குறித்து விளக்கம் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், ‘மாணவர்கள் மற்றும் அமைதியான முறையில் போராடியவர்கள் மீதான இந்த ஒடுக்குமுறை ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். மாணவர்கள் நியாயமான மற்றும் பொறுப்புள்ள கல்வி முறையைக் கோரினர். அவர்களின் குரலைக் கேட்பதற்குப் பதிலாக, பாதுகாப்புப் படையினர் கொடிய ஆயுதங்கள் மற்றும் கண்ணீர்ப்புகை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி அவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்துள்ளனர். மாணவிகளும் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர்.

Source link